.
welcome to my web site, Please write your comments for my future life

Thursday, January 12, 2012

Mother


 
மூன்று அல்லது நான்காய்
உறவுகள் சேர்ந்து
பொழுதுகளை
ஒரு பொல்லாப்புமில்லாமல்
சந்தோசங்களால்
நிரப்பியிருப்பார்கள்
வீட்டுமுற்றத்தை..!

அந்த
சேர்ந்திருந்த
அதிக நாட்களோடு
பிரிந்திருக்கிறோம்
பிரிதொரு காரணத்துக்காய்..!

இப்போ
முற்றத்ததைப் பற்றி
யோசிக்கும் போதெல்லாம்
மூன்று கதிரைகள்
ஞாபகம் வரும்..

எனக்குத் தெரியும்
அவள் மட்டும்
இருக்ககையில் இருந்தபடியே
இரண்டு கதிரைகளை
நனைத்திருப்பாள்
சந்தோசங்கள் நிரம்பி வழிந்த
கண்ணீர்களினால்..

No comments:

Post a Comment

Powered by Blogger.