.
welcome to my web site, Please write your comments for my future life

Sunday, January 8, 2012

ஏன் இந்த கொலவெறி....?

சினிமா என்று எடுத்துக் கொண்டால் அதில் விருப்பம் இல்லாதவர்கள் என்று எவரும் இருக்கமுடியாது என்று சொல்லிக் கொள்ளலாம். இந்த அளவுக்கு சினிமாவின் மோகம் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தவகையில் "3" படத்திற்காக தனுஸ் பாடிய "வை திஸ் கொலவெறி" பாடல் முதன்முதலாக YouTubeல் வெள்ளோட்டம் செய்யப்பட்டிருந்தது. அதனை அதிகமான ரசிகர்கள் கேட்டும் பார்த்தும், ரசித்தும், அதனை தங்களது ரசனைக்கு அமைவாக பல்வேறு வழிகளில் தங்களது கற்பனைக்கு அமைவாக மாற்றியும் பாடியிருக்கின்றார்கள். இப்பொழுதும் பாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்கிடையில் இப்பாடலை உலகத்தில் உள்ள அதிகபடியான ரசிகர்கள் பார்த்தமையினால் அண்மையில் YouTube தனுஸ்க்கு தங்க விருதினை வழங்கியிருந்தது நீங்கள் அறிந்ததே.
இவ்வாறு இந்தக் கொலவெறி படும் பாடு என்னவென்று சொல்வது. உலகம் முழுவதும் சக்க போடு போடுவதால் தனுஸ் ரசிகர்கள் சந்தோசம் கொண்டாடினாலும் மறுபக்கத்தில் இதற்கு எதிரான பாடல்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் தனுஸ்க்கு அதிகபடியான நெருக்குவாரங்கள் தற்பொழுது எழுந்த வண்ணமே இருக்கின்றது. இது தனுஸ் ரசிகர்களுக்கு மற்றுமொறு தலையிடியைத் தந்திருக்கின்றது.

என்னதான் அவர் தங்க விருது வேண்டினாலும் தழிலுக்கு அவர் செய்ய துரோகம்தனை தமிழ் உலகம் பார்த்துவிட்டு சும்மாதான் இருந்திடுமா..? தமிழ் படங்களில் நடித்து தமிழர்கள் பார்வைக்கும், அதிகமான தமிழ் ரசிகர்கள் பார்ப்பதற்கும் விடுகின்றவேளை பின் விளைவுகளையும் பார்த்திருக்க வேண்டுமல்லவா..?

இன்று அதிகமான சிறுவர்கள் தின்று மென்றுகொண்டிருக்கும் பாடல்களில் இது முதன்மையானதாக திகழ்வதால் வளர்கின்ற பயிர்களுக்கு தமிழ் தாகத்தை விதைப்பதைவிடுத்து ஆங்கில மோகத்தை அப்படியே அள்ளிப் பருக்கியிருப்பது அநியாயம் என்றுதான் புத்தி ஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ.. இனிவரும் காலங்கள் எத்தனை எதிர்ப்புக்களை இப்பாடல் சம்பாதிக்கும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மொத்தத்தில் இந்தக் கொலை வெறி தமிழ் மேல் விழுந்த வெறி என்றுதான் சொல்ல முடியும்.

No comments:

Post a Comment

Powered by Blogger.